Tuesday, November 5, 2013

மெட்ரோ ரெயில் சோதனை ஓட்டம்: ஜெயலலிதா நாளை தொடங்கி வைக்கிறார் Metro rail test run will be starting tomorrow

மெட்ரோ ரெயில் சோதனை ஓட்டம்: ஜெயலலிதா நாளை தொடங்கி வைக்கிறார் Metro rail test run will be starting tomorrow

சென்னை, நவ.5-

சென்னையில் ரூ.14 ஆயிரத்து 600 கோடி செலவில், மெட்ரோ ரெயில் திட்டம் தொடங்கப்பட்டு 45.1 கிலோ மீட்டர் தூரத்திற்கு 2 வழித்தடங்களில் அமைக்கப்பட்டு வருகின்றன.

வண்ணாரப்பேட்டை - சென்னை விமான நிலையம் இடையே 23.1 கிலோ மீட்டர் தூரத்திற்கு முதல் வழித்தடமும், சென்டிரல்-பரங்கிமலை இடையே 22 கிலோ மீட்டர் தொலைவிற்கு 2-வது வழித்தடமும் அமைக்கப்படுகிறது.

மெட்ரோ ரெயில் திட்டத்தில் முதல் வழித்தடத்தில், வண்ணாரப்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை, பூமிக்கு அடியில் சுரங்கப்பாதை வழியாக 11 ரெயில் நிலையங்களை கடந்து வரும் மெட்ரோ ரெயில், சைதாப்பேட்டை கூவம் ஆற்றிற்கு முன்பு, சுரங்கத்தில் இருந்து பறக்கும் பாதையாக மாறி பயணத்தை தொடங்குகிறது. அதன்பிறகு, சின்னமலை முதல் சென்னை விமான நிலையம் வரை 6 ரெயில் நிலையங்களை பறக்கும் பாதையிலேயே கடக்கிறது.

இதேபோல், 2-வது வழித்தடத்தில், சென்டிரல் முதல் அண்ணாநகர் டவர் வரை சுரங்கப்பாதை வழியாக 8 ரெயில் நிலையங்களை கடக்கும் மெட்ரோ ரெயில், திருமங்கலத்தில் இருந்து பறக்கும் பாதைக்கு வந்துவிடுகிறது. அதன்பிறகு, கோயம்பேடு வழியாக 8 ரெயில் நிலையங்களை கடந்து பறக்கும் பாதையிலேயே விமான நிலையத்தை சென்றடைகிறது.

இந்த வழித்தடத்தில் இயக்குவதற்காக பிரேசில் நாட்டிலிருந்து 4 பெட்டிகளுடன் கூடிய நவீன ரக ரெயில் வாங்கப்பட்டு உள்ளது. இந்த ரெயில் சோதனை ஓட்டம் நடத்துவதற்காக 800 மீட்டர் நீளத்தில் அமைக்கப்பட்டுள்ள சோதனை ஓட்டப்பாதையில் நிறுத்தப்பட்டு உள்ளது.

இந்த ரெயிலின் சோதனை ஓட்டத்தை நாளை (புதன்கிழமை) முதல்-அமைச்சர் ஜெயலலிதா கொடியசைத்து தொடங்கிவைக்கிறார். இதற்காக நேற்று இரவு தமிழக தொழில் துறை அமைச்சர் தங்கமணி கோயம்பேட்டில் உள்ள பணிமனை மற்றும் முனையத்தில் மெட்ரோ ரெயில் அதிகாரிகள் முன்னிலையில் ஆய்வு செய்தார்.

குறிப்பாக ரெயிலில் தானியங்கி கதவுகள், என்ஜின், சக்கரம் போன்றவை செயல்படுவது குறித்து சோதனை செய்தார். மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள், வெளிநாட்டு ரெயில் நிறுவன பொறியாளர்கள், போலீஸ் உயர் அதிகாரிகளுடன் அமைச்சர் ஆய்வு செய்தார்.

முதல்-அமைச்சர் ஜெயலலிதா கொடியசைத்து சோதனை ஓட்டத்தை தொடங்கிவைப்பதற்காக அமைக்கப்படும் தனி மேடையையும் அமைச்சர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அனைத்தும் வெற்றிகரமாக இயங்கியதால் அமைச்சருக்கும், அதிகாரிகளுக்கும் திருப்தி ஏற்பட்டது. நாளை முதல் தொடர்ந்து சோதனை ஓட்டம் நடத்தப்படும். அவை முடிந்தவுடன், 2014-ம் ஆண்டு மத்தியில் கோயம்பேடு - பரங்கிமலை இடையே மெட்ரோ ரெயில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதில், கோயம்பேடு, சி.எம்.பி.டி., அரும்பாக்கம், வடபழனி, அசோக்நகர், ஈக்காட்டுதாங்கல், ஆலந்தூர் வரை 7 ரெயில் நிலையங்களை இணைக்கும் வகையில் பயணிகள் சேவை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

...

shared via

Monday, November 4, 2013

அ.தி.மு.க. பிரமுகர்கள் மரணம்: ஜெயலலிதா இரங்கல் jayalalitha obituary admk members dead

அ.தி.மு.க. பிரமுகர்கள் மரணம்: ஜெயலலிதா இரங்கல் jayalalitha obituary admk members dead

சென்னை, நவ. 4–

முதல் – அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறி இருப்பதாவது:–

மதுரை புறநகர் மாவட்டம், உசிலம்பட்டி நகரம் அ.தி.மு.க. அவைத் தலைவர் அமாவாசை, காஞ்சீபுரம் மத்திய மாவட்டம், அச்சிறுப்பாக்கம் பேரூராட்சி எம்.ஜி.ஆர். இளைஞர் அணி துணைச் செயலாளரும், பேரூராட்சி மன்ற 13–வது வார்டு உறுப்பினருமான சீனிவாசன், வேலூர் புறநகர் மேற்கு மாவட்டம், பேர்ணாம்பட்டு ஒன்றியம், கதவாளம் ஊராட்சி செயலாளர் ஆர்.வில்லியம், திருப்பூர் மாநகர் மாவட்டம், அன்னூர் ஊராட்சி ஒன்றியகுழு 7–வது வார்டு உறுப்பினர் பத்மாவதி ஆகியோர் மரணமடைந்து விட்டனர் என்ற செய்தி கேட்டு வருத்தமுற்றேன்.

அமாவாசை, சீனிவாசன், வில்லியம், பத்மாவதி ஆகியோரை இழந்து வாடும் அவர்களது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், மரணமடைந்தோர்களது ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

இவ்வாறு முதல்– அமைச்சர் ஜெயலலிதா கூறி உள்ளார்.

...

shared via

Sunday, November 3, 2013

தீபாவளிக்கு சென்றவர்கள் சென்னை திரும்ப 4300 சிறப்பு பஸ்கள் ஏற்பாடு: ஜெயலலிதாவுக்கு பயணிகள் பாராட்டு jayalalitha arranged 4300 special buses for people return to chennai

தீபாவளிக்கு சென்றவர்கள் சென்னை திரும்ப 4300 சிறப்பு பஸ்கள் ஏற்பாடு: ஜெயலலிதாவுக்கு பயணிகள் பாராட்டு jayalalitha arranged 4300 special buses for people return to chennai

சென்னை, நவ. 3–

தீபாவளி பண்டிகையை கொண்டாட சொந்த ஊர்களுக்கு பொதுமக்கள் சென்று வர வசதியாக தமிழக அரசு சார்பில் 8350 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

முதல்– அமைச்சர் ஜெயலலிதா ஏற்பாட்டில் சென்னையில் இருந்து 4500 சிறப்பு பஸ்கள் பல்வேறு மாவட்டங்களுக்கு இயக்கப்பட்டன.

இதேபோல பல நகரங்களில் இருந்து சென்னைக்கு 4050 சிறப்பு பஸ்கள் விடப்பட்டன. இந்த சிறப்பு பஸ்கள் அனைத்தும் 29–ந்தேதி முதல் 1–ந்தேதி வரை 4 நாட்கள் இயக்கப்பட்டன.

பண்டிகையை கொண்டாட சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் சென்னை திரும்ப வசதியாக 4300 சிறப்பு பஸ்கள் நேற்று முதல் 5–ந்தேதி வரை விடப்படுகிறது.

அரசு போக்குவரத்து கழகங்களின் பஸ்கள் மூலம் லட்சணக்கான மக்கள் பயணம் செய்துள்ளனர்.

கன்னியாகுமரி, நாகர்கோவில், நெல்லை, தூத்துக்குடி, மதுரை, திருச்சி, கோவை, தஞ்சாவூர், கும்பகோணம், பெங்களூர், ஓசூர், சிதம்பரம், சேலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து சென்னைக்கு சிறப்பு பஸ்கள் புறப்பட்டு வருகின்றன.

தீபாவளி பண்டிகை நேற்று இரவு முடிந்தாலும் இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் பெரும்பாலானவர்கள் இன்று பயணம் செய்வார்கள்.

இன்று மாலையில் இருந்து சிறப்பு பஸ்கள் அதிக அளவில் இயக்கப்படுகிறது. அரசு விரைவு போக்குவரத்து கழகங்களும் விடப்பட்டுள்ளது.

பொதுமக்கள் அந்தந்த மாவட்ட நகரங்களில் உள்ள முன்பதிவு மையங்கள், தகவல் மையங்களுக்கு சென்றால் அவர்களுக்கு இடவசதியை அதிகாரிகள் செய்து கொடுப்பார்கள்.

பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் உள்ளிட்ட அனைத்து அரசு துறைகளும் நாளை செயல்படுவதால் பஸ்களில் கூட்டம் நிரம்பி வழியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முக்கிய நகரங்களில் போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர்கள் நேரடி மேற்பார்வையில், மேலாளர்கள், துணை மேலாளர்கள் பயணிகளுக்கு விரிவான ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள்.

இதேபோல சென்னை கோயம்பேட்டில் இருந்தும் புதுச்சேரி, கடலூர், சிதம்பரம், திருச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை மற்றும் தென் மாவட்டங்களுக்கும் சிறப்பு பஸ்கள் புறப்பட்டு செல்கின்றன.

பொதுமக்கள் நெரிசல் இல்லாமல் பஸ்சில் அமர்ந்து பயணம் செய்யும் வசதியாக சிறப்பு பஸ்கள் உதவியாக இருந்ததாகவும், இதனால் குறிப்பிட்ட நேரத்தில் சொந்த ஊர் சென்று பண்டிகையை கொண்டாட முடிந்ததாகவும் பயணிகள் தெரிவித்தனர்.

முதல்– அமைச்சர் ஜெயலலிதாவின் போக்குவரத்து வசதி ஏற்பாட்டை மனப்பூர்வமாக பாராட்டு கிறோம் என்று பயணிகள் தெரிவித்தனர்.

...

shared via

Friday, November 1, 2013

மக்கள் வாழ்வில் துன்பங்கள் நீங்கி இன்பங்கள் பெருகட்டும்: ஜெயலலிதா தீபாவளி திருநாள் வாழ்த்து jayalalitha diwali festival wishes to people

மக்கள் வாழ்வில் துன்பங்கள் நீங்கி இன்பங்கள் பெருகட்டும்: ஜெயலலிதா தீபாவளி திருநாள் வாழ்த்து jayalalitha diwali festival wishes to people

சென்னை, நவ. 1–

முதல்–அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள தீபாவளி வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:–

மக்கள் கொண்டாடும் பண்டிகைகளில் சிறப்பு மிக்க பண்டிகையாம் தீபாவளித் திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் அனைவருக்கும் எனது உளம் கனிந்த தீபாவளி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நரகாசுரன் எனும் கொடிய அரக்கனை மகாலட்சுமி துணையுடன் திருமால் அழித்த தினமே தீபாவளி பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது. இந்தத் திருநாள் இருளை நீக்கி, ஒளியை ஏற்றிடும் தினமாகவும், தீமைகள் அகன்று நன்மைகள் பெருகும் நாளாகவும் விளங்குகிறது.

இந்த நன்னாளில் மக்கள், மகிழ்ச்சியினை வெளிப்படுத்தும் வகையில், தங்களின் இல்லங்களை அலங்கரித்தும்; தீபங்களை ஏற்றி வைத்தும்; புத்தாடைகளை அணிந்தும்; உற்றார் உறவினர்களுடன் பட்டாசுகளை வெடித்தும்; இனிப்புகளை பகிர்ந்து உண்டும்; உற்சாகத்துடனும், குதூகலத்துடனும் தீபாவளி பண்டிகையைக் கொண்டாடி மகிழ்கிறார்கள்.

இந்த தீப ஒளித் திருநாளில், மக்கள் வாழ்வில் துன்பங்கள் நீங்கி, இன்பங்கள் பெருகட்டும்; அனைவரும் உயர்வும், வளமும் பெற்று ஒற்றுமையுடன் வாழ்ந்திட வேண்டுமென்று வாழ்த்துகிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

...

shared via

Wednesday, October 30, 2013

விலைவாசி ஏற்றத்துக்கு மத்திய அரசே காரணம்: சட்டசபையில் ஜெயலலிதா தகவல் central government cause rate price jayalalitha infirm assembly

விலைவாசி ஏற்றத்துக்கு மத்திய அரசே காரணம்: சட்டசபையில் ஜெயலலிதா தகவல் central government cause rate price jayalalitha infirm assembly

சென்னை, அக். 30–

சட்டசபையில் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ராமச்சந்திரன் விலைவாசி குறித்து பேசியதற்கு பதில் அளித்து முதல்– அமைச்சர் ஜெயலலிதா பேசியதாவது:–

விலைவாசி ஏற்றத்திற்கு காரணம் மத்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைகள். ஆனால் விலைவாசி ஏற்றத்தை சமாளிக்க மாநில அரசு தன்னால் முடிந்த அளவு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

பிற மாநில அரசுகளைப் பற்றி நான் பேச வரவில்லை. தமிழ்நாடு அரசைப் பொறுத்தவரையில், மத்திய அரசினால் ஏற்பட்ட வெங்காய விலை ஏற்றத்தினை சமாளிக்க மாநில அரசு பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமென்றால், கோயம்பேடு மார்க்கெட்டில் பெரிய வெங்காயத்தின் விலை கிலோ ஒன்றுக்கு 60 ரூபாய். சாம்பார் வெங்காயம் கிலோ ஒன்றுக்கு 75 முதல் 80 ரூபாய் விலையில் விற்கப்படுகிறது. பழமுதிர் நிலையங்கள் போன்ற நவீன மயமாக்கப்பட்ட கடைகளில் பெரிய வெங்காயம் கிலோ ஒன்றுக்கு 70 ரூபாய் என்ற விலையில் விற்கப்படுகிறது. சாம்பார் வெங்காயம் கிலோ ஒன்றுக்கு 95 ரூபாய் என்ற விலையில் விற்கப்படுகிறது.

ஆனால் தமிழ்நாடு அரசின் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளில் தற்போது சென்னையில் 30 கடைகள் இயங்கி வருகின்றன. தரமான பெரிய வெங்காயம் கிலோ ஒன்றுக்கு 50 ரூபாய் என்ற விலைக்கு விற்கப்படுகிறது. சாம்பார் வெங்காயம் கிலோ ஒன்றுக்கு 60 ரூபாய் என்ற விலைக்கு விற்கப்படுகிறது.

ஆக, இந்த அரசைப் பொறுத்த வரையில், மக்களுக்கு ஏற்பட்டுள்ள சுமையை குறைப்பதற்கு தன்னால் இயன்ற நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பிற மாநிலங்களில் பெரிய வெங்காயத்தின் விலை என்னவென்றால் பெங்களூரில் 58 ரூபாய், ஐதராபாத்தில் 60 ரூபாய், கேரளாவில் 70 ரூபாய், டெல்லியில் 65 ரூபாய், மும்பையில் 70 ரூபாய், கொல்கத்தாவில் 70 ரூபாய், பீகாரில் 80 ரூபாய், அசாமில் 78 ரூபாய்.

தமிழ்நாட்டிற்கு பெரிய வெங்காயம் மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள நாசிக், லாசல்கான், அகமது நகர், பிம்பல்கான் மற்றும் ஷோலாப்பூர் ஆகிய பகுதிகளிலிருந்தும், கர்நாடக மாநிலத்தில் உள்ள ஹாசன், ஹுப்ளி, தேவகரே மற்றும் பெங்களூரில் இருந்தும், ஆந்திர மாநிலத்தில் உள்ள கர்நூல், ஆதோனி ஆகிய பகுதிகளிலிருந்து வரவழைக்கப்படுகிறது.

ஆந்திர மாநிலத்தில் உள்ள கர்நூலில் போராட்டம் நடைபெறுவதால், அங்கிருந்து வெங்காயம் கொண்டு வர இயலாத நிலை உள்ளது. கோயம்பேட்டிற்கு நாளொன்றிற்கு சுமாராக 70 லாரிகளில் வெங்காயம் வந்து கொண்டிருந்தது.

24.10.2013 அன்று 55 லாரிகளும், 25.10.2013 மற்றும் 26.10.2013 ஆகிய தேதிகளில் 50 லாரிகள் மட்டுமே வந்துள்ளன. இருப்பினும், தமிழகத்தில் வெங்காயத்தின் விலை மற்ற மாநிலங்களில் உள்ள வெங்காயத்தின் விலை ஒத்ததாகவே உள்ளது.

நுகர்வோருக்கு நியாயமான விலையில் வெங்காயம் கிடைப்பதை உறுதி செய்யும் நடவடிக்கையாக, சென்னை பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளில் தற்போது நாளொன்றுக்கு 6 டன் பெரிய வெங்காயமும், 1 டன் சாம்பார் வெங்காயமும் விற்பனை செய்யப்படுகிறது. 26.10.2013 முதல் எனது உத்தரவின்படி, பெரிய வெங்காயம் மற்றும் சாம்பார் வெங்காயம் கொள்முதல் இரட்டிப்பாக்கப்பட்டு உள்ளது.

காய்கறிகளின் விலையை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக, உடனடியாக கூடுதலாக 10 பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளைத் துவக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அம்மா உணவகம் பற்றி எல்லோருக்கும் தெரியும். சாதாரணமாக ஓட்டல்களில் இட்லி சாம்பார் சாப்பிடுவது என்றால் என்ன விலை என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால், அம்மா உணவகங்களில் ஒரு இட்லி ஒரு ரூபாய்க்கு வழங்கப்படுகிறது.

சாம்பார் சாதம் 5 ரூபாய்க்கு வழங்கப்படுகிறது. தயிர் சாதம் 3 ரூபாய்க்கு வழங்கப்படுகிறது. இப்படி அதிகமான அம்மா உணவகங்களை எங்கெல்லாம் துவங்க முடியுமோ துவங்கி மக்களுடைய சுமையை குறைப்பதற்கு இந்த அரசு மேலும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

சாதாரணமாக ஒரு பாட்டில் மினரல் வாட்டரை வாங்கிக் குடிக்க வேண்டுமென்றால் 20 ரூபாய் ஆகும். 20 ரூபாய்க்கு குறைந்து வெளிச்சந்தையில் கிடைக்காது. ஆனால், போக்குவரத்துத்து துறை மூலமாக அதே தரமான குடிநீரை, மினரல் வாட்டரை 10 ரூபாய்க்கு வழங்கிக் கொண்டிருக்கிறோம். இப்படி மாநில அரசின் சக்திக்கு உட்பட்டு மாநில அரசின் அதிகார வரம்பிற்கு உட்பட்டு என்னனென்ன நடவடிக்கைகளை, விலைவாசியை குறைக்க என்னென்ன நடவடிக்கைகளை எடுக்க முடியுமோ எடுத்து வருகிறோம்.

அதே சமயத்தில், மத்திய அரசு பொறுப்புடன் நடந்து கொள்ளவில்லை. நிதிநிலையைப் பற்றி மத்திய அரசிடமிருந்து மாநில அரசுக்கு வரவேண்டிய நிதிகளைப் பற்றி எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இங்கே குறிப்பிட்டார்.

மத்திய அரசுக்கு ஒரு நம்பகத்தன்மை இருக்க வேண்டும். ஒரு ஆண்டுக்கான பட்ஜெட்டை வெளியிட்டு, நிதிநிலை அறிக்கையை சமர்ப்பித்து, நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த பிறகு, ஒவ்வொரு மாநிலத்திற்கு இவ்வளவு நிதி ஒதுக்கப்படும் என்று அதில் ஒரு திட்டம் போட்ட பிறகு அதை மாற்றக்கூடாது.

ஏனென்றால், வெவ்வேறு இனங்களில் மத்திய அரசிடமிருந்து மாநில அரசுக்கு வரவேண்டிய நிதி உள்ளது. அப்போது அந்தத் திட்டத்தின்கீழ் என்னென்ன பணிகளை இங்கு மேற்கொள்ளலாம் என்று மாநில அரசும் திட்டம் தீட்டுகிறது. மத்திய அரசு குறிப்பிட்ட ஒரு திட்டத்தின்கீழ் இத்தனை கோடி ரூபாய் மாநில அரசுக்கு ஒதுக்கப்படும் என்று அவர்களுடைய மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் அறிவித்த பின்னர் மாநில அரசு அதற்கேற்ப தனது திட்டங்களை வகுத்து செயல்பட ஆரம்பிக்கிறது.

ஒவ்வொரு திட்டத்தின் கீழும் சில பணிகளை மேற்கொண்டு செலவும் செய்து விடுகிறது. பல கோடி ரூபாய்களை எந்த நம்பிக்கையில் செலவு செய்கிறோம். பின்னர் மத்திய அரசு இந்தப் பணத்தை நமக்கு அளிக்கும், நமக்கு வரவேண்டிய நிதி மத்திய அரசிடமிருந்து கிடைக்கும் என்ற நம்பிக்கையில்தான் செலவு செய்கிறோம். ஆனால், அண்மையில், துரதிர்ஷ்டவசமாக, இதுவரை வரலாற்றில் இல்லாததாக, ஒரு முன்மாதிரி இல்லாத வகையில் மத்திய அரசு தன்னுடைய நம்பகத்தன்மையையே கெடுத்துக் கொண்டுள்ளது.

அதாவது, ஏற்கெனவே, பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு ஒவ்வொரு திட்டத்தின் கீழ் இத்தனை கோடி ரூபாய் ஒதுக்கப்படும் என்று தெரிவித்த பிறகு அதில் நாங்கள் அதை நம்பி செலவு செய்ய ஆரம்பித்த பிறகு, 20 சதவீதம் அளவு வரை வெட்டு செய்திருக்கிறார்கள். 20 சதவீதம் குறைத்து இருக்கிறார்கள். அப்படியானால், குறிப்பிட்டு மத்திய அரசிடம் கிடைக்கும் என்ற நம்பிக்கையை ஏற்கெனவே மாநில அரசு பல பணிகளை துவங்கிவிட்டதே, பல கோடி ரூபாய்களை செலவு செய்து விட்டதே, அவையெல்லாம் எங்கிருந்து வரும், அந்தப் பணத்தை யார் மீண்டும் ஈடுசெய்வார்கள்.

ஆகவே, இப்படி பல பிரச்சனைகளுடன் போராடிக் கொண்டு அதே நேரத்தில் மத்திய அரசு எடுக்கின்ற தவறான நடவடிக்கைகள் காரணமாக, மத்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைகள் காரணமாக, சாமான்ய மக்கள் பாதிக்கப்பட்டுக் கொண்டு இருக்கிறார்கள், துன்பப்பட்டு கொண்டிருக்கிறார்கள் என்பதை உணர்ந்து இந்த அரசு, தமிழக அரசு, தன்னால் இயன்ற அளவு மக்களின் துன்பங்களை குறைத்து, விலைவாசியை குறைக்க பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இப்போது மாநில அரசுக்கு என்று இருக்கின்ற ஒரே வருவாய் வணிக வரிமூலமாக வருகின்ற வருவாய்தான். வேறு எந்த வருமானமும் கிடையாது. அதிலேயும் கை வைக்க வேண்டும் என்று மத்திய அரசு விரும்புகிறது.

அதற்காகத்தான், இந்த நல்லெண்ண சேவை வரி மசோதாவை அவர்கள் கொண்டு வருகிறார்கள். அதற்காகத்தான் அதை கடுமையாக எதிர்த்திருக்கிறோம். சாதாரண எதிர்ப்பல்ல, ஒரு முறையல்ல, இரு முறையல்ல, 2011 முதல் இந்த மசோதாவை பற்றி அவர்கள் குறிப்பிடும் போதெல்லாம், கொண்டு வரவேண்டும் என்று சொல்லும் போதெல்லாம், மாநில அரசு, இந்த அரசு, எனது தலைமையிலான அரசு தொடர்ந்து எதிர்த்துக் கொண்டே வந்திருக்கிறது. அண்மையிலும், மாநில நிதி அமைச்சர்களின் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. அதில் நம்முடைய மாநிலத்தின் சார்பில் வணிக வரி அமைச்சர் அங்கே கலந்து கொண்டார். முழுவதுமாக எதிர்த்து இருக்கிறோம்.

அதாவது, ஒரு ஷரத்து, இரண்டு ஷரத்து என்றல்ல. ஒரு பிரிவு, இரண்டு பிரிவு என்றல்ல. ஒட்டுமொத்தமாக அந்த சட்டத்தையே எதிர்த்து இருக்கிறோம். அதையும் மீறி, அவர்கள் இந்தச் சட்டத்தைக் கொண்டு வந்தால், பாதிப்பு அதிக நாட்கள் வரை இருக்காது. அடுத்த நாடாளுமன்றத் தேர்தல் முடிந்தவுடன், மத்தியிலே அரசு மாறும், ஆட்சி மாறும், எல்லாமே மாறும், அப்போது இந்தச் சட்டத்தையே தூக்கி எறிவோம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

...

shared via

Tuesday, October 29, 2013

TN govt to frame new large mineral mining policy soon: Jaya

Chennai, Oct 29: The Tamil Nadu Government would evolve a new policy governing large mineral quarries after the formation of a high-level committee, set up to go into alleged illegal mining, Chief Minister Jayalalithaa informed the state assembly today.

"I am determined that such natural resources of significance are not exploited (by mining them) beyond government allowed levels," she said intervening during debate on the supplementary estimates for 2013-14.

Noting that a country's economic growth depended on the proper use of natural resources like minerals, water and energy, she said she had constituted the committee under Revenue Secretary Gagandeep Singh Bedi to study illegal mining of beach minerals like garnet, ilmenite and rutile in Tuticorin and later extended it to cover Tirunelveli, Kanyakumari, Tiruchirappalli and Madurai districts.

Jayalalithaa's response came when DMDK member Alagaapuram R Mohan Raj wanted to know what action the government had taken against illegal mining of the beach minerals. The Chief Minister said the committee had submitted its report in respect of Tuticorin, while its findings about other districts were awaited, adding presently enquiry was on in Tirunelveli district.

Jayalalithaa said that based on the Bedi Committee report, her government would decide on a large mineral quarries policy. The state government had in August last set up the committee, following a report submitted by former Tuticorin District Collector Ashish Kumar that 2.25 lakh tonnes of mineral sand had been illegally mined.

PTI

Monday, October 28, 2013

வேதாரண்யம் அரசு ஆஸ்பத்திரியில் பெண்கள் மகப்பேறு வார்டு தொடங்கப்படும்: ஜெயலலிதா அறிவிப்பு Women maternity ward will begin in Vedaranyam government hospital Jayalalitha announced

வேதாரண்யம் அரசு ஆஸ்பத்திரியில் பெண்கள் மகப்பேறு வார்டு தொடங்கப்படும்: ஜெயலலிதா அறிவிப்பு Women maternity ward will begin in Vedaranyam government hospital Jayalalitha announced

சென்னை, அக்.28–

சட்டசபையில் வேதாரண்யம் எம்.எல்.ஏ. காமராஜ், வேதாரண்யம் அரசு பொது மருத்துவமனையில் உள்ள மருத்துவ காலி பணியிடங்களை நிரப்ப அரசு ஆவன செய்யுமா? என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு அமைச்சர் கே.சி.வீரமணி கூறும்போது, தற்போது 7 மருத்துவர்கள் அங்கு பணிபுரிவதாகவும் மீதி பணியிடங்களை பதவி உயர்வு, பணி அமர்வு மூலமாக நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றார்.

அப்போது முதல்–அமைச்சர் ஜெயலலிதா குறுக்கிட்டு கூறியதாவது:–

அந்த மருத்துவமனையில் பெண்கள் மகப்பேறு பிரிவுக்கு போதிய வசதி இல்லை, தனி பிரிவு தொடங்க வேண்டும் என்று காமராஜ் எம்.எல்.ஏ. கோரிக்கை வைத்தார். அவரது கோரிக்கை பரிசீலிக்கப்பட்டு பெண்கள் தனி பிரிவு தொடங்க ஆவன செய்யப்படும்.

இவ்வாறு முதல்–அமைச்சர் ஜெயலலிதா கூறினார்.

...

shared via

Popular Posts