Saturday, October 26, 2013

சரத்குமாரின் தாயார் மறைவு: முதல்வர் ஜெயலலிதா இரங்கல் Sarath Kumar mother died Chief Minister Jayalalitha condoled

சரத்குமாரின் தாயார் மறைவு: முதல்வர் ஜெயலலிதா இரங்கல் Sarath Kumar mother died Chief Minister Jayalalitha condoled

சென்னை, அக். 26-

திருநெல்வேலி மாவட்டம், தென்காசி சட்டமன்ற உறுப்பினர் சரத்குமாரின் தாயார் புஷ்பலீலா இன்று உடல்நலக்குறைவு காரணமாக மரணம் அடைந்தார்.

இதையடுத்து முதலமைச்சர் ஜெயலலிதா, சரத்குமாருக்கு அனுப்பிய இரங்கல் கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

"தங்களின் அன்புத் தாயார் புஷ்பலீலா இன்று (26.10.2013)  உடல்நலக் குறைவால் இயற்கை எய்தினார் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த துயரமும், மனவேதனையும் அடைந்தேன்.

இந்தத் துயரச் சம்பவத்தினால் ஈடுசெய்ய முடியாத இழப்பு தங்களுக்கு ஏற்பட்டுள்ள போதிலும், இந்தத் துயரத்தைத் தாங்கிக் கொள்ளக் கூடிய சக்தியையும், தைரியத்தையும் தங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் அளிக்க வேண்டும் என்றும், தாயார் புஷ்பலீலாவின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாறவும் எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

அவரை இழந்து வாடும் தங்களுக்கும், தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு ஜெயலலிதா தனது கடிதத்தில் கூறியுள்ளார்.

...

shared via

No comments:

Post a Comment

Popular Posts