Monday, October 28, 2013

வேதாரண்யம் அரசு ஆஸ்பத்திரியில் பெண்கள் மகப்பேறு வார்டு தொடங்கப்படும்: ஜெயலலிதா அறிவிப்பு Women maternity ward will begin in Vedaranyam government hospital Jayalalitha announced

வேதாரண்யம் அரசு ஆஸ்பத்திரியில் பெண்கள் மகப்பேறு வார்டு தொடங்கப்படும்: ஜெயலலிதா அறிவிப்பு Women maternity ward will begin in Vedaranyam government hospital Jayalalitha announced

சென்னை, அக்.28–

சட்டசபையில் வேதாரண்யம் எம்.எல்.ஏ. காமராஜ், வேதாரண்யம் அரசு பொது மருத்துவமனையில் உள்ள மருத்துவ காலி பணியிடங்களை நிரப்ப அரசு ஆவன செய்யுமா? என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு அமைச்சர் கே.சி.வீரமணி கூறும்போது, தற்போது 7 மருத்துவர்கள் அங்கு பணிபுரிவதாகவும் மீதி பணியிடங்களை பதவி உயர்வு, பணி அமர்வு மூலமாக நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றார்.

அப்போது முதல்–அமைச்சர் ஜெயலலிதா குறுக்கிட்டு கூறியதாவது:–

அந்த மருத்துவமனையில் பெண்கள் மகப்பேறு பிரிவுக்கு போதிய வசதி இல்லை, தனி பிரிவு தொடங்க வேண்டும் என்று காமராஜ் எம்.எல்.ஏ. கோரிக்கை வைத்தார். அவரது கோரிக்கை பரிசீலிக்கப்பட்டு பெண்கள் தனி பிரிவு தொடங்க ஆவன செய்யப்படும்.

இவ்வாறு முதல்–அமைச்சர் ஜெயலலிதா கூறினார்.

...

shared via

No comments:

Post a Comment

Popular Posts