Monday, November 4, 2013

அ.தி.மு.க. பிரமுகர்கள் மரணம்: ஜெயலலிதா இரங்கல் jayalalitha obituary admk members dead

அ.தி.மு.க. பிரமுகர்கள் மரணம்: ஜெயலலிதா இரங்கல் jayalalitha obituary admk members dead

சென்னை, நவ. 4–

முதல் – அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறி இருப்பதாவது:–

மதுரை புறநகர் மாவட்டம், உசிலம்பட்டி நகரம் அ.தி.மு.க. அவைத் தலைவர் அமாவாசை, காஞ்சீபுரம் மத்திய மாவட்டம், அச்சிறுப்பாக்கம் பேரூராட்சி எம்.ஜி.ஆர். இளைஞர் அணி துணைச் செயலாளரும், பேரூராட்சி மன்ற 13–வது வார்டு உறுப்பினருமான சீனிவாசன், வேலூர் புறநகர் மேற்கு மாவட்டம், பேர்ணாம்பட்டு ஒன்றியம், கதவாளம் ஊராட்சி செயலாளர் ஆர்.வில்லியம், திருப்பூர் மாநகர் மாவட்டம், அன்னூர் ஊராட்சி ஒன்றியகுழு 7–வது வார்டு உறுப்பினர் பத்மாவதி ஆகியோர் மரணமடைந்து விட்டனர் என்ற செய்தி கேட்டு வருத்தமுற்றேன்.

அமாவாசை, சீனிவாசன், வில்லியம், பத்மாவதி ஆகியோரை இழந்து வாடும் அவர்களது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், மரணமடைந்தோர்களது ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

இவ்வாறு முதல்– அமைச்சர் ஜெயலலிதா கூறி உள்ளார்.

...

shared via

No comments:

Post a Comment

Popular Posts