Wednesday, October 23, 2013

பொதுமக்கள் வசதிக்காக மேலும் ஒரு ‘அம்மா’ குடிநீர் உற்பத்தி நிலையம்: ஜெயலலிதா அறிவிப்பு Jayalalitha announced public facility amma water

பொதுமக்கள் வசதிக்காக மேலும் ஒரு 'அம்மா' குடிநீர் உற்பத்தி நிலையம்: ஜெயலலிதா அறிவிப்பு Jayalalitha announced public facility amma water

சென்னை, அக். 23–

போக்குவரத்துக் கழகங்களில் ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு ஓய்வூதிய பணப் பயன்களை வழங்கியும், சிற்றுந்துகள் (ஸ்மால் பஸ்) மற்றும் புதிய பேருந்துகளைத் துவக்கி வைத்தும் முதல்–அமைச்சர் ஜெயலலிதா பேசியதாவது:–

பயணிகளின் நலனைக் கருத்தில் கொண்டும், அரசுப் போக்குவரத்துக் கழகங்களை பலவகைப்படுத்தும் நோக்கிலும், "அம்மா குடிநீர் திட்டம் என்னால் அறிமுகப்படுத்தப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.

கும்மிடிப்பூண்டியில் உள்ள சாலைப் போக்குவரத்து நிறுவன வளாகத்தில் நாளொன்றுக்கு மூன்று லட்சம் லிட்டர் குடிநீர் உற்பத்தி செய்யும் "அம்மா குடிநீர் உற்பத்தி நிலையம்" 15.9.2013 அன்று என்னால் துவக்கி வைக்கப்பட்டது. இங்கு பெறப்படும் அதிக அளவு நீரினைக் கருத்தில் கொண்டு மேலும் ஒரு "அம்மா குடிநீர் உற்பத்தி நிலையம்" அமைக்கப்படும் என்பதையும் இதன் மூலம், நாளொன்றுக்கு மூன்று லட்சம் லிட்டர் குடிநீர் கூடுதலாக கிடைக்கும் என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு முதல்–அமைச்சர் ஜெயலலிதா பேசினார்.

...

shared via

No comments:

Post a Comment

Popular Posts