Friday, October 25, 2013

உச்சநீதிமன்ற தீர்ப்புபடி புதிய காவல் சட்ட மசோதா: சட்டசபையில் ஜெயலலிதா தாக்கல் supreme court judgement New police legislation assembly jayalalitha submit

உச்சநீதிமன்ற தீர்ப்புபடி புதிய காவல் சட்ட மசோதா: சட்டசபையில் ஜெயலலிதா தாக்கல் supreme court judgement New police legislation assembly jayalalitha submit

சென்னை, அக். 25–

சட்டசபையில் முதல்– அமைச்சர் ஜெயலலிதா 2013–ம் ஆண்டு தமிழ்நாடு காவல் (சீர்திருத்தம்) சட்ட முன்வடிவை தாக்கல் செய்தார். அதில் கூறியிருப்பதாவது:–

உச்சநீதிமன்றம் 2006–ம் ஆண்டு பிரகாஷ்சிங் வழக்கில் கூறிய தீர்ப்பில் ஒவ்வொரு மாநிலமும் கட்டாயமாக ஒரு புதிய காவல் சட்டத்தை இயற்ற வேண்டும் என்று கூறி உள்ளது.

மேலும் புதிய சட்டம் இயற்றப்படும் வரை பின் வரும் பிரச்சினைகளின் பேரில் மாநில அரசுக்கு பணிப்புரைகளையும் வழங்கி உள்ளது.

1. மாநில பாதுகாப்பு ஆணையம்.

2. காவல் தலைமை இயக்குனரின் தேர்வு மற்றும் குறைந்தபட்ச காலம்.

3. காவல் தலைவரின் மற்றும் பிற அலுவலர்களின் குறைந்தபட்ச காலம்.

4. புலனாய்வை பிரித்தல்.

5. காவல் பணியாளர் வாரியம்.

6. காவல் புகார்கள் அதிகார அமைப்பு.

உச்சநீதிமன்றம் கூறியதன் வகையில் அரசு காவல் சீர்திருத்தம் தொடர்பாக சட்டத்தை இயற்ற முடிவு செய்து உள்ளது.

அதன்படி 2013–ம் ஆண்டு தமிழ்நாடு காவல் சீர்திருத்த அவசர சட்டம் செப்டம்பர் 10–ந்தேதி ஆளுநரால் பிறப்பிக்கப்பட்டு செப்டம்பர் 11–ந்தேதியிட்ட தமிழ்நாடு சிறப்பு அரசிதழில் வெளியிடப்பட்டது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

...

shared via

No comments:

Post a Comment

Popular Posts