Monday, October 28, 2013

எந்த காலகட்டத்திலும் விழுப்புரம் மாவட்டம் புறக்கணிக்கப்படவில்லை: சட்டசபையில் ஜெயலலிதா பதில் Jayalalitha answer Villupuram district not ignored

எந்த காலகட்டத்திலும் விழுப்புரம் மாவட்டம் புறக்கணிக்கப்படவில்லை: சட்டசபையில் ஜெயலலிதா பதில் Jayalalitha answer Villupuram district not ignored

சென்னை, அக். 28–

சட்டசபையில் தே.மு.தி.க. உறுப்பினர் வெங்கடேசன் துணை நிதி நிலை அறிக்கை மீது பேசும்போது விழுப்புரம் மாவட்டம் புறக்கணிக்கப்படுவதாக குற்றம் சாட்டினார்.

அப்போது முதல்–அமைச்சர் ஜெயலிலதா குறுக்கிட்டு கூறியதாவது:–

தானே புயலால் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்கள் விழுப்புரம், கடலூர் ஆகும். இந்த 2 மாவட்டங்களிலும் ஆயிரக்கணக்கான கோடி செலவில் நிவாரணத் திட்டத்தை அறிவித்து செயல்படுத்தினோம்.

வீடு இழந்தவர்களுக்கு 1 லட்சம் வீடு கட்டும் திட்டத்தையும் அறிவித்தேன். எனவே எந்த கால கட்டத்திலும் விழுப்புரம் மாவட்டம் புறக்கணிக்கப்படவில்லை. புறக்கணிக்கப்படுவதாக கூறும் கூற்று சரியில்லை.

உறுப்பினரின் கேள்விகளுக்கு விவரங்கள் கேட்டு இருக்கிறேன். பதில் வந்ததும் புள்ளி விவரங்களுடன் விளக்கம் தருவேன்.

இவ்வாறு ஜெயலலிதா கூறினார்.

...

shared via

No comments:

Post a Comment

Popular Posts